districts

சென்னை முக்கிய செய்திகள்

மதுக்கூடமாக மாறி வரும்  எழும்பூர் ரயில் நிலைய ஜெனரேட்டர் பகுதி

சென்னை, அக். 26- சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ஐ.எஸ்.ஓ. 9001-2000 சான்று பெற்றுள்ளது. ஆனால் தற்போது அந்த ரயில் நிலையம் மிகவும் அசுத்தமாக மாறி வருகிறது.   ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ெஜனரேட்டர் இருக்கும் பகுதியில், பார்சல் அலுவலகத்தில் சுமை தூக்கும்  ஒப்பந்த ஊழியர்கள், ஓட்டுநர்கள் புகை பிடிப்பதும், மது  அருந்திவிட்டு மது பாட்டில்களை ெஜனரேட்டர் அருகிலேயே  விட்டுச் செல்வதும், சிறுநீர், மலம் கழிப்பதும் தினசரி நடைபெறுகிறது.

ஆவடியில்  ரயில் தடம் புரண்ட  விபத்தில் ஓட்டுநர் சஸ்பெண்ட்

அம்பத்தூர், அக். 26- அம்பத்தூர் அருகே உள்ள அண்ணனூர் ரயில்வே பணிமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார ரயில் ஒன்று புறப்பட்டு ஆவடி ரயில் நிலையத் திற்கு சென்றது.   ரயிலை ஓட்டுநர் ரவி (58) இயக்கினார். அப்போது அந்த ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிற்காமல், அங்கிருந்து  200 மீட்டர் தூரம் சென்று தண்டவாளத்தை விட்டு விலகியது.  இதனால் முன் பகுதியில் இருந்த 4 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் எஞ்சினுடன் சென்ற ரயில் பெட்டி மின் கம்பத்தில்  மோதி நின்றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ரயில் தடம் புரண்டதற்கு  ஓட்டுநர் ரவியின் கவனக்குறைவுதான் காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து ரவியை பணியிடை நீக்கம் செய்து சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மார்பக புற்றுநோய்: கிராமப்புற பெண்களிடம் பிரச்சாரம்

சென்னை,அக்.26- தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் பட்டியலின பெண்களுக்கு இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள கிராமப்புறங்க ளில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு  பிரச்சாரத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி  தொடங்கி வைத்தார். இதன் மூலம் ஆரம்பகால நோயறிதல் மற்றும் உரிய நேரத்தில் தலையீடு செய்வதை  எளிதாக்குகிறது. இதன் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள  ஆளுநர் மாளிகையில் இந்திய டர்ன்ஸ் பிங்க் நிறுவனர் தலைவர் பி.ஏ.ஆனந்தகுமார் முன்னிலையில் நடந்தது. தேசிய துணைத் தலைவர் வினு ஹாசன்,  பொதுச் செயலாளர் சங்கீதா பழனி,  மற்றும் செயலாளர் சுவாதி பழனி செல்வி உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர். இந்திய டர்ன்ஸ் பிங்க் அமைப்பின் நிறுவனர் தலை வர் பி.ஏ.ஆனந்தகுமார், இந்தப் பிரச்சாரத்திற்கான “மார்பக புற்றுநோய் குறித்த கிராமப்புறங்க ளில் நடைபெற வுள்ள இந்தப் பிரச்சாரம்” உயிர்களைக் காப்ப தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும்  அவர் கூறினார்.

குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்தது

சிதம்பரம், அக்.26- சிதம்பரம் புறவழிச் சாலையில் உள்ளது அத்தினா குளோபல் தனியார் பள்ளி. வியாழக் கிழமை (அக்.26) காலை பரங்கிப் பேட்டை, முட்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வேன் வந்து கொண்டிருந்தது.  பி முட்லூர் பகுதியில் திடீரென வேனில் தீப்பொறி கிளம்பி தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மற்றும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்டுள்ளனர்.  சிறிது நேரத்தில் பள்ளி வேனில் தீ மளமளவென  பரவி வேன் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.  தகவல் அறிந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்த னர். இதனால் அந்த பகுதி யில் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.  இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.