districts

img

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்பள பாக்கி வழங்க கோரி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கடலூர் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஈபிஎப், இஎஸ்ஐ திட்டத்தை அமல்படுத்த கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கே.ரத்தினம், மாவட்ட துணைத் தலைவர் ஏ.அண்ணாமலை, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். சௌந்தரராஜன், மாவட்ட உதவி செயலாளர் கே. விஜய் ஆனந்த், மாநில உதவி தலைவர் கே.டி சம்மந்தம் ஆகியோர் பேசினார். என்.ஜெயராஜ் நன்றி கூறினார்.