திருவண்ணாமலை, அக். 12- விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண் தையல் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனை வருக்கும் உடனடியாக தையல் இயந்திரம் வழங்க வேண்டும். திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்தில், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திலும் பத்தாண்டுகளாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல் உள்ளதை சேர்க்க வலியுறுத்தியும் திரு வண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ .மேரி தலைமை தாங்கினார். தையல் சங்க பொதுச் செயலாளர் எம். வீர பத்திரன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா. பாரி, நிர்வாகிகள் அப்துல் காதர், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.