districts

கன்னடபாளையம் கிடங்கிலிருந்து குப்பைகள் அகற்றம்

சென்னை, ஜூன் 5 -

     தாம்பரம் மாநகராட்சி, கன்னட பாளையம் குப்பை கிடங்கில் சுமார்  90 விழுக்காடு குப்பைகள அகற்றப் பட்டுள்ளது.

     தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலைக்கு அருகே, கிஷ்கிந்தா  செல்லும் வழியில் கன்னடபாளை யம் உள்ளது. மாநகராட்சி பகுதி களில் சேரும் குப்பைகள் கொண்டு வந்து இங்கு கொட்டப்படுகிறது. இதன்காரணமாக நூற்றுக்கணக் கான டன் குப்பை சேர்ந்து அந்த இடம் குப்பை மலையாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதி யில் துர்நாற்றம் வீசியது.

    குப்பை கிடங்கால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் கெட்டுவிட்டது. இந்த  குப்பை கிடங்கு சுற்றி இருக்கும் மக்கள் மூச்சுதிணறல், தோல் வியாதி  உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளாகி  வந்தனர். அவ்வப்போது குப்பை கிடங்கில் ஏற்படும் தீயால், பொதுமக்களி கடும் பாதிப்புகளை அனுபவித்து வந்தனர். ஆகவே, குப்பை கிடங்கை முழுமையாக அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியும், அப்பகுதி மக்களும் கோரி வந்தனர்.

   இதனால், மாநகராட்சி நிர்வா கம் குப்பை கிடங்கை அகற்றும் பணியை தொடங்கியது. 90  விழுக்காடு குப்பைகளை அகற்றி உள்ளது.  இந்த குப்பை கிடங்கை யொட்டி செல்லும் சாலை மயானத்திற்கு செல்வதற்கும், குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வதற்கும் பிரதான சாலையாக உள்ளது. குப்பைகளை முழுமை யாக அகற்றி பொதுமக்கள் பயன் பாட்டிற்கு சாலை கொண்டு வரப்படும். குப்பை அகற்றிய பிறகு  அந்த இடத்தில் மாநகராட்சி வாகனங்கள் நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது.