சென்னை, ஜன. 19 - கேங்மேன்களை களப்பணி உதவியாள ராக மாற்றி 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை -1ன் 17வது மாநாடு ஞாயிற்றுக் கிழமை யன்று (ஜன.19) கிண்டியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், பகுதி நேர பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பெண்களுக்கு தனிக் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்க ளுக்கு வாரியமே நேரடியாக கூலி வழங்க வேண்டும், முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதி களை சரி செய்து புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின்வாரியத்தை பொதுத்துறை யாக பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் வி.விஜய பாஸ்கர் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் வி.தண்டபாணி கொடியேற்றி னார். இணைச்செயலாளர் எஸ்.பழனி வர வேற்றார். பி.குமரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் பேசினார். வேலைஅறிக்கையை டி.பண்டாரம் பிள்ளையும், வரவு செலவு அறிக்கையை எஸ்.குமாரும் சமர்ப்பித்தனர். அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப் புக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜய லட்சுமி, சென்னை-2 செயலாளர் எம்.ஹெலன் தேவகிருபை, ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் செயலாளர் டி.மோகன் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.கண் ணன் நிறைவுரையாற்றினார். துணைத்தலை வர் சி.சத்திய நாராயணன் நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு கிளையின் தலைவராக டி.பண்டாரம்பிள்ளையும், செயலாளராக எஸ்.குமாரும், பொருளாளராக எஸ்.பழனி யும் தேர்வு செய்யப்பட்டனர்.