districts

சென்னை முக்கிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி, தொடர் முகூர்த்தம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

சென்னை,செப்.6- விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு திருச்சி காந்தி மார்க் கெட்டில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் பூ மார்கெட்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகள் என  முகூா்த்தம் மற்றும் விநாயகா் சது்ர்த்தி பண்டிகை தொடா்ந்து வந்ததால், பூக்கள் விற்பனை களைகட்டியுள்ளது.  அதற்கேற்ப விலையும் கிடுகிடுவென உயா்ந்துள்ளது. கனகாம்பரம் பூ விலை ஒரு கிலோ 800  ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாகவும்; மல்லிகை 300 ரூபாயில் இருந்து 600 ரூபா யாகவும் சுகந்தராஜா 100 ரூபாயில் இருந்து 240 ஆகவும் உயர்ந்து உள்ளது. ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்பனையான ஒரு கிலோ ஜாதிமல்லி விலை ரூ.500-க்கும் விற்பனையாகிறது. இது தவிர வாழை இலையின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. 100 இலைகள் கொண்ட ஒரு கட்டு வாழை இலை சில நாள் களுக்கு முன்பு வரை ரூ.400 முதல் ரூ.450- வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கட்டு இலை ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை விற்பனையாகிறது.

டெங்கு காய்ச்சல்:  பயிற்சி பட்டறை

சென்னை,செப்.6- பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறை இயக்கத்தின் சார்பாக 8 மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக  நுட்புனர்களுக்கு சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா,  ஆந்திர பிரதேஷ் மற்றும்  தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் ஆய்வக நுட்பனர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

விமான நிலையத்தில்  பெண்அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

சென்னை,செப்.6- சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலை பேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா. இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு வியாழனன்று பணிக்கு வந்தார். வெள்ளி யன்று  மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. வரும் டிசம்பரில்  நிர்மலா பணி ஓய்வு பெற  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி  இன்று மின்ரயில்கள் இயக்கம் 

சென்னை,செப்.6- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சனிக் கிழமை  (செப். 7) பொது விடுமுறை என்பதால் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக் கிழமை கால அட்டவணைப்படி இயக்கப் படும்  என்று தெற்கு ரயில்வே அறிவித்து ள்ளது. அதன்படி சென்னை சென்டிரல் - அரக் கோணம், சென்னை சென்டிரல் - கும்மிடிப் பூண்டி, சென்னை சென்டிரல் - சூலூா்பேட்டை  மற்றும் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை யின் படி இயக்கப்படும்.

குன்றத்தூரில் போலி மருத்துவர் கைது

சென்னை, செப்.6- மருத்துவம் படிக்காமலேயே குன்றத்தூ ரில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை, போலீ சார் கைது செய்தனர்.  குன்றத்தூர், மேத்தா நகர் 2வது  மேற்கு தெருவை சேர்ந்தவர் கலீல் (78). குன்றத்தூர், மேட்டு தெருவில் கிளினிக் வைத்து, கடந்த 2 ஆண்டுகளாக பொது மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவர், மருத்துவம் படிக்காமலேயே வைத்தி யம் பார்த்து வருவதாக மருத்துவத்துறை அதி காரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், புதனன்று அந்த கிளினிக்கிற்கு சென்ற காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது, மருத்து வம் படிக்காமலேயே கலீல், மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை மருத்துவத் துறை அதிகாரிகள், குன்றத்தூர் போலீசாரி டம் ஒப்படைத்தனர். போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், பல்லாவரத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சுமார் 10 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த கலீல், நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டார். மேலும், கிளினிக் வைத்தால் நிறைய பணம் சம்பாதிக் கலாம் என்ற ஆசையில் அங்கிருந்து விலகிய அவர், குன்றத்தூரில் தனியாக அறை எடுத்து அதில் கிளினிக் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவரது கிளினிக்கில் இருந்து ஏராளமான ஆங்கில மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள்

திருவண்ணாமலை, செப்.6- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் வட்டார அளவில் பாரம்பரிய உணவுத் திருவிழா போட்டிகள் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், “கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பலவித நோய்க ளுக்கு ஆளாகிறார்கள். அவர்களின் நலன் மேம்படுத்தும் நோக்கத்தில் ஊட்டச்சத்து, உடல் நலம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்து சிறப்பு பிரச்சாரம் நடக்கிறது. சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா திரு வண்ணாமலை மாவட்டத்தி லுள்ள 18 வட்டாரங்களிலும் வட்டார அளவில் ஊட்டச் சத்து விழிப்பு ணர்வு போட்டி கள் மற்றும் 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சிகள் அளவில் ஊட்டச்சத்து போட்டிகள் நடைபெற உள்ளது. ஊராட்சி அளவிலான போட்டிகள் செப். 13 முதல் 17 வரை கிராம பஞ்சாயத்து சேவை மையத்தில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வட்டார அளவிலான போட்டிகள் வருகிற செப்.20 முதல் செப். 23 வரை வட்டார இயக்க மேலாண்மை அலுவ லகம் வானவில் மையத்தில் நடக்கிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெறும் போட்டிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

ராணிப்பேட்டையில் தொழிற்பயிற்சி மேளா
ராணிப்பேட்டை, செப்.6- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகள் சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பயிற்சி மேளா ராணிப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செப். 23 அன்று காலை 9 முதல் மாலை 3 மணி வரை ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு களைக் கொண்டு நடத்தப்படுகிறது.  இந்த முகாமில் தகுதியுடைய ஐடிஐ தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து ஒன்றிய அரசின் என்சிசி சான்றிதழ் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள ராணிப்பேட்டை உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது சயniயீநவனளவடி@பஅயடை.உடிஅ என்ற மின்னஞ்சல் அல்லது 97903 99978 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கட்டாய திருமணத்தால் மனம் உடைந்த சிறுமி தற்கொலை

ராணிப்பேட்டை, செப்.6 -  ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், அம்மூர் மேட்டு தெருவைச் சேர்ந்த ரங்கநாதன். 17 வயது மகளுக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த திருமணத்தில் விருப்பமில்லை என கூறியுள்ளார். ஆனால், கட்டாயப்படுத்தி தாய் மாமனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி, வியாழனன்று (செப்.5) வாலாஜாவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுமியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வாலாஜா ரோடு ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கராபுரத்தில் புற காவல் நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, செப் 6 - கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலைய சாவடி அமைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் சுமார் 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள், வணிகர்கள் வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.