சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில், காந்தியடிகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பள்ளிகளின் தாளாளர் எஸ்.குமார், பள்ளியின் முதல்வர் ரூபியாள் ராணி, தலைமை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை முதல்வர் அறிவழகன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு காந்தியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.