districts

img

காவல்நிலைய மரண வழக்கை நடத்த நிதியுதவி...

நெய்வேலியில் காவல் நிலையத்தில் நிகழ்ந்த சுப்பிரமணி லாக்கப் மரண  வழக்கை நடத்துவதற்கான ரேவதி வழக்கு நிதியாக கடலூர் குடியிருப்போர் கூட்டமைப்பின் சார்பில்  ரூ.13 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு  உறுப்பினர்  உ.வாசுகியிடம் குடியிருப்போர் கூட்டமைப்பு நிர்வாகிகள் அளித்தனர். மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாநில குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எம். மருதவாணன், எஸ். திருஅரசு ஆகியோர் உடன் இருந்தனர்.