சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் மாவட்டம், எரிச்சனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தியின் குடும்பத்தினரை சந்தித்த வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, ரூ.25 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். மறைந்த சத்திய மூர்த்தியின் மனைவி முதுகலை பட்டப்படிப்பு எம்.எஸ்.சி தாவரவியல் படித்துள்ளார். எனவே, கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.