விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்கள் வீடு கட்டுவதற்கான நிதியுதவி ஆணைகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) வழங்கினார். இந்த நிகழ்வில் செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரா.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.