districts

ஏழு அம்ச கோரிக்கையை நிறைவேற்றுக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

காஞ்சிபுரம், பிப்.11 - ஏழு அம்ச கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட 8வது மாநாடு  வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாவட்ட மாநாடு காஞ்சி புரத்தில்  ஆர்.வேல்முருகன் நினைவரங்கில் மாவட்டத் தலைவர் வி.முத்துசுந்தரம் தலைமையில் (பிப்.8) சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் த.கண்ணன் வரவேற்க, மாவட்ட துணை தலைவர் சீதா சீனிவாசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டைத் துவக்கி வைத்து  தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செய லாளர் துரை.முருகன் பேசினார். மாவட்டச் செயலாளர் கி.மாணிக்கவேல் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.கண்ணபிரான் வரவு-செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தனர். சகோதர சங்கங்களின் தலைவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நவின்குமார், சு.ரவிசந்திரன், பா.சாரங்க பாணி, வி.லெனின்,  என்.சாரங்கன், வெ.தென்னரசு, இ.ரவிச்சந்திரன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  இம்மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளர் சா.பாரி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.டில்லி பாபு நன்றி கூறினார். தீர்மானங்கள் பணிச்சுமைக்கேற்ற ஊழியர் கட்டமைப்பு உருவாக்கிட வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஊழியர்க ளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்க வேண்டும். குறைந்த ஊதியத்து டன் பணியாற்றும் முழு சுகாதார ஒருங்கி ணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் ஆகியோரின் ஊதியம் உயர்த்த வேண்டும். அனைத்து நிலைகளிலும் பணியாறுதல் உத்திரவுகளை கமந்தாய்வுகளின் மூலமும், பாரபட்சமின்றி அமரும் அனைத்து பணியிடங்களில் பணியாற்றிட வழிவகை செய்ய வேண்டும்.  மாநிலத்தில் மிகப்பெரிய உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தினை இரண்டாக பிரித்து, மாவட்ட பிரிதலுக்கு பின்பாக உள்ள ஊராட்சி ஒன்றியங்களை பூலோக ரீதியாக மறுசீரமைத்திட வேண்டும். மத்திய-மாநில அரசின் திட்டங்களை முழுமையாக மக்களுக்க் கொண்டு செல்ல போதிய கால அவகாசம் வழங்கிட ஊழியர் கட்ட மைப்பு ஏற்படுத்திட வேண்டும். அணைந்து திட்டங்களில் மேற்கொள்ள தெரி விக்கும் கணிணி பணி (ஜியோடெக், TN Pass. PPA VPTax) ஆகியவைகளை செயல்படுத்திட பிரத்யோகமாக அனைத்து கிராம ஊராட்சிக்களுக்கும் ஊழியர்கள்  பணியமர்த்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக வி.முத்துசுந்தரம், செயலாளராக கி.மாணிக்கவேல், பொரு ளாளராக கே.கண்ணபிரான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.