districts

img

கடலூரில் இலவச மருத்துவ முகாம்

கடலூர், பிப்.28-  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில், ஜோதி நகரில் கட்டணமில்லா மருத்துவ முகாம் நடை பெற்றது. சென்னை புரசைவாக்கம் ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூட்டமைப்பின் தலைவர் பாலு.பச்சையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், ஜோதி நகர் நல சங்க தலைவர் எம்.ஜெகநாதன், துணை தலைவர் ஏ.ரங்கநாதன், நிர்வாகிகள் இணைப் பொதுச்செயலாளர் எஸ்.கே.தேவநாதன், பொருளாளர் டி.குமார், ஊராட்சி செயலாளர் வேலவன்,  வத்சலா ராணி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் பி.வெங்கடேசன் வர வேற்றார். கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்,  மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துணை மேயர் பா.தாமரைச்செல்வன், வட்டாட்சியர் ஏ.பலராமன் வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.  இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி.பெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை  நோய் உள்ளிட்ட பல்வேறு பரி சோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.