திருவள்ளூர் வட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பட்டா 748 பயனாளிகளுக்கும், இலவச வீட்டு மனை பட்டா 852 என மொத்தம் 1,600 பயனாளிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திங்களன்று (பிப். 5.) பட்டா வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கோட்டாச்சியர் (பொ) ஐவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.