சென்னை,அக்.9- டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் பார்வை அளவையியல் கல்லூரி ஆகியவை இணைந்து சென்னையில் 12 ஆதர வற்ற இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. வியாழக்கிழமை (அக்.10) உலக பார்வை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைப் பிரிவு தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி, “உலகளவில் 4 கோடியே 50 லட்சம் குழந்தைகளுக்கு பார்வை பாதிப்பு நிலைகள் உள்ளதாக கூறினார். இந்தி யாவில் 0-15 வயது பிரிவிலுள்ள 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைப் பார்வைத் திறனற்றதாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் மிக அதிக எண்ணிக்கையில் பார்வையற்ற குழந்தைகள் இருப்பது நம் நாட்டில்தான் என்றார். 5 முதல் 15 வயது பிரிவிலுள்ள குழந்தைகளில் ஏறக்குறைய 7.5 விழுக்காடு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை குறைபாடு உள்ளதாகவும் இதனால் அவர்கள் பிற சமூக நிகழ்வுகளில் பங்கேற்க பெரும்பாலும் தவறுகின்றனர் என்றும் அவர் கூறினார். குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவ நிபுணராகப் பணியாற்றும் டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார், கண் பராமரிப்பிற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்கினார். சென்னையில் உள்ள அகர்வால் மருத்துவமனையின் அனைத்து கிளினிக்குகளிலும் அக்டோபர் 31-ம் தேதி வரை குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள் ளப்படுகிறது. இதில் பங்கேற்க 9594924048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.