சென்னை, ஆக. 16- வாய், பற்களை பாதுகாப்பாக பராமரிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 3500 பள்ளி குழந்தை களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சவீதா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.கே. மோகன் அறக்கட்டளை சார்பில் வாய்வழி சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 12 நகராட்சி பள்ளிகளில் படிக்கும் 3,500 பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதமாக இந்த பரி சோதனை செய்யப்பட்டது. சவீதா பல் மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மாணவர் டாக்டர். எம். பிபின் ஒருங்கிணைத்து இந்த முகாம்களை சிறப்பாக நடத்தினார். ஷெனாய் நகர் திரு.வி.க. பள்ளியில் இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது, இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சிகளுக்காக சென்னை மாநகராட்சி காவல்துறை துணை ஆணையர் பிரவீன் குமார்