கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சி. குணசேகரன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.