districts

img

இலவச புற்றுநோய், கண் பரிசோதனை முகாம்

சென்னை, ஆக. 26-

     அம்பத்தூர் மங்களபுரத்தில் இலவச புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோ தனை முகாம் சனிக்கிழமை (ஆக. 26) நடைபெற்றது.

     தோழர் எம்.குப்புலட்சுமி நினைவு நாளையொட்டி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, அகர்வால் கண் மருத்துவமனை குழு ஆகியவை இணைந்து இந்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை சிஐடியு வடசென்னை மாவட்டச்  செயலாளர். சு.லெனின் சுந்தர் துவக்கி வைத்தார். இதில் சிபிஎம் மாவட்டக் குழு  உறுப்பினர் சி.சுந்தரராஜ், பகுதிச் செயலாளர்  ஆர்.கோபி,  ஏ.தமிழ்செல்வி, பரமேஸ்வரி,  அஜிதா (மாதர் சங்கம்),  சிவராமன்,  எம்.பகத்சிங் (வாலிபர் சங்கம்),  ஜி.மூர்த்தி, டி.பால்சாமி (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), வீரன், ராஜா, என்.கணேசன், தீபா (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், மார்பக, வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதை தடுக்கும் வழிமுறைகளையும் மருத்துவர் பிரமிளா கிரேஸ் எடுத்துக் கூறினார். இதில் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. ரேகா தலைமையிலான மருத்துவ குழுவினர் 60 க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோ தனை மேற்கொண்டனர்.