சிதம்பரம் அருகே பெரியகுமட்டி ஊராட்சியில் கருணை விழிகள் சமூக விழிப்புணர்வு சேவை அமைப்பு, கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி, புதுச்சேரி இந்திரா காந்தி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் வெ.மரகதம் துவக்கி வைத்தார். இதில் சேவை அமைப்பின் நிர்வாகி சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.