சென்னை,மார்ச் 15- அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வாலிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். மீஞ்சூர் அருகே புகம்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அலுவலகம் வைத்துள்ளார். ரயில்வே, வங்கி, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி கார்த்திகேயன் அலுவலகம் நடத்தி வந்துள் ளார். கார்த்திகேயனை நம்பி ராமநாத புரத்தைச் சேர்ந்த ரகு என்பவர் ரூ.12 லட்சம் கொடுத்தார். தனது உறவினர்கள் 10க்கும் மேற்பட் டோரிடம் ரூ.4 முதல் ரூ.36 லட்சம் வரை வாங்கி கார்த்திகேயனிடம் ரகு தந்துள்ளார். ரூ.1 கோடி வரை பணம் பெற்ற கார்த்திகே யன், யாருக்கும் வேலை வாங்கித் தராமல் தலைமறைவாகிவிட்டார். மோசடி செய்யப் பட்டதை அறிந்த ரகு, கார்த்திகேயன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை ஆதம்பாக்கத்தில் பதுங்கி இருந்த கார்த்தி கேயனை ஆவடி போலீசார் கைது செய்தது.