districts

img

சிறுபுழல்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல்

திருவள்ளூர், பிப்.7- சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முன்முயற்சியால், சிறுபுழல்பேட்டையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு  புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள சிறுபுழல்பேட்டையில் 1 முதல் 8ஆம்வகுப்பு வரை 210 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இடநெருக்கடி காரணமாக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார் முன் முயற்சியால் நபார்டு திட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கான 3 வகுப்பறைகள் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டு வதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.வெள்ளி யன்று (பிப்.7), நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவி குமார் மற்றும் அதிகாரிகள், கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.