districts

img

அரசு பள்ளியில் திருடிய முன்னாள் மாணவர் கைது

சென்னை, மார்ச் 6- அரசு பள்ளியில் மின்விசிறி, சிசிடிவி கேமராக்கள், எல்இடி பல்புகளை திருடிய முன்னாள் மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் விம்கோ நகரில் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருவொற்றியூர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இப்பள்ளிக்கு மக்கள் பிரதிநிதிகளும், பொதுநல அமைப்புகளும் தாராளமாக நிதி  உதவியும், பொருள் உதவியும் செய்து வரு கின்றனர். இதனால் இந்த பள்ளி நல்ல வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மாதம் மின் விசிறி கள் 42, சிசிடிவி கேமரா 4, எல்இடி விளக்கு  12 என காணாமல் போயிருந்தது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை திரு வொற்றியூர் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வந்தனர் இதற்கிடையே சாத்தாங்காடு பகுதியில் உள்ள பழைய பொருட்கள் வாங்கும் கடை யில் மின்விசிறியை இளைஞர் ஒருவர் விற்பதாக காவல் துறையினருக்கு ரகசியத்  தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சாத்தாங்காடு பகுதியை சேர்ந்த அந்த பள்ளி யின் முன்னாள் மாணவர் ரஞ்சித் (23), தினேஸ்வரன் (19) மற்றும் 17 வயது சிறுவன்  ஒருவனும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடு பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து, இரண்டு பேரை சிறைக்கும், சிறு வனை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.