முன்னாள் பிரதமரும், சமூக நீதி காவலருமான வி.பி. சிங் 94வது பிறந்த நாளையொட்டி செவ்வாயன்று (ஜூன் 25) சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மு.கண்ணப்பன், அர.சக்கரபாணி, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.