சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.பி. கலியபெருமாள் 5-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர்கள் பி.பி. கே. சித்தார்த்தன், பி.சேரன் சிதம்பர நகர தலைவர் மக்கீன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா, சம்பத் குமார், வட்டாரத் தலைவர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சியினர் உடன் இருந்தனர்.