வேலூர். ஜன 24- சாமான்ய மக்கள் குறைந்த செலவில் நீதிமன்றத்தை நாட வழி வகை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக் கழகத்தில் மூத்த வழக்கறிஞர் ராஜா கோபாலாச்சாரியார் நினைவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. வேந்தர் விசுவநாதன் தலைமை தாங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:- நமது நாட்டில் சட்டம் அனை வருக்கும் அன்றாட தேவையாக உள்ள தால் அடிப்படை சட்டங்கள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் பாடமாக இணைக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான நீதிமன்றங்களில் முறை யான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, நீதிமன்றத்திற்கு வரும் மக்களுக்கு காத்திருப்பு அறைகள் இல்லை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னரும், நீதிமன்ற உள்கட்ட மைப்புகள் மேம்படவில்லை. போது மான நீதிமன்ற அலுவலர்கள், ஊழி யர்கள் இல்லை.
நீதிமன்றங்களுக்கு ஒன்றிய அரசு 60 விழுக்காடு நிதியை வழங்குகிறது. மாநில அரசுகள் 40 விழுக்காடு வழங்க வேண்டும் ஆனால், நாட்டின் பல மாநிலங்களில் பொருளாதார நிதி நிலை சீராக இல்லாததால் போதிய நிதியை நீதித்துறைக்கு ஒதுக்குவதில்லை. நீதித்துறையில் அதிகளவு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை ஒன்றிய, மாநில அரசுகள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழக்கறிஞர்கள் மாநிலங்களில் பெரும்பாலும் நியமிக்கப் படாமல் உள்ளது. இவற்றையெல்லாம் களைந்தால் தான் வழக்குகள் தேங்காமல் இருக்கும். சாமான்ய மக்களும் குறைந்த செலவில் நீதிமன்றத்தை நாடும் வகையில் நீதிமன்ற கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், பதிவாளர் ஜெயபாரதி, மூத்த வழக்கறிஞர் விஜயராகவலு மற்றும் வழக்கறிஞர்கள், வி.சி.ராஜ கோபாலாச்சாரியார் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.