சென்னை,மார்ச் 23- அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திட்டங்களை முடக்கியது அதிமுகதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டப்பேரவையில் புதனன்று(மார்ச் 23) நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தாலிக்குத் தங்கம் வழங்கக்கூடிய திட்டத்தை திமுக அரசு நிறுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ,“ அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திட்டங்களை முடக்குவதற்குப் பெயர் போனது அதிமுக அரசுதான். கடந்த காலங்களில், பல நேரங்களில் இது நிரூபண மாகியுள்ளது. ஊடகத்தினர், பொது மக்கள் என அனைவரும் இதை நன்கு அறிந்துள்ள னர்” என்றார். திமுக ஆட்சியின்போது ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட சட்ட மன்ற -தலைமைச் செயலக வளாகத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்? அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை மாற்ற நினைத்தது யார்? மதுரவாயல்-சென்னை துறைமுகம் திட்டத்தை முடக்கி யது யார்? சமச்சீர் கல்விப் பாடப் புத்த கத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்துப் பாடலையும், 7 ஆம் வகுப்புப் பாடத் திட்டத்தில் நாடகக் கலை குறித்த பாடத்தில் கலைஞர் பெயரையும் ஸ்டிக்கரை வைத்து மறைத்தது யார்? இப்படி வரிசையாக என்னால் சொல்ல முடியும். அதற்காகதான், நாங்கள் பழிவாங்குகி றோம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்பட முறையான திட்டங்கள் எதுவாக இருந்தா லும், அதை திமுக அரசு நிறைவேற்றும் என்றும் முதல்வர் கூறினார்.