districts

img

மாணவிகளின் பாதுகாப்புக்கு அரசுப் பள்ளியை சீரமைத்த காவல்துறையினர்

கடலூர், ஜூன் 17-

   அரசுப் பள்ளி மாணவிக ளின் கோரிக்கையை ஏற்று பள்ளி மைதானத்தை காவல்துறை யினர் சீரமைத்து கொடுத்தனர்.

    கடலூர் மாவட்டம், விருத்தா சலம்-பெண்ணாடம் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடு முறை முடிந்து கடந்த பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளி யில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவி களுக்கு வாழ்த்துகளை தெரி வித்தார்.

    அப்போது பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாகவும், அத னால் தங்களால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர்.  

   மேலும் சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து வந்தாலும் அதனை கண்காணிக்க முடி யாத நிலையில் மரங்கள் புதர் போல சூழுந்து இருப்பதாகவும் கூறினர்.

   இதனை கேட்டறிந்த டி.எஸ்.பி விருத்தாசலம் காவல்நிலைய கோட்டத்திற்குட்பட்ட விருத்தா சலம் காவல் நிலையம், போக்கு வரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலை யம், ஆலடி, கம்மாபுரம், மங்க லம்பேட்டை மற்றும் கருவேப்பி லங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களை கொண்டு பள்ளியின் மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.  

   டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் தலைமையில், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில், 20 மகளிர் காவலர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்கள் விளையாட்டு மைதானத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளி மைதானத்தில் மண்டிகிடந்த புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தூய்மைபடுத்தினர். இது பற்றி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறுகையில், பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, பாது காப்பை உறுதி செய்யும் வகையில் தூய்மை பணி நடை பெற்றதாகவும், பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும்”என்றார்.