திருவள்ளூர், செப். 2- குடும்ப செலவுக்கு வாங்கிய பணத் திற்கு கூடுதல் வட்டி கேட்டு வீடு புகுந்து அடித்ததால் மன உளைச் சலுக்கு ஆளான இருளர் இன கூலி தொழிலாளி விஷம் அருந்திய நிலை யில் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட் சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதி யில் வசித்து வருபவர் இருளர் இன கூலி தொழிலாளி வேலு (31). இவரது மனைவி தங்கம்மா (25). இவர்க ளுக்கு மூன்று பெண் குழந்தை கள் உள்ளனர். ஆரிக்கம்பேடு கிரா மத்தை சேர்ந்த அறிவழகன் என்பவ ரின் பூந்தோட்டத்தில் பூ பறிக்கும் வேலை செய்த வேலு, கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.20 ஆயிரம் கடன் வாங்கியுள் ளார். இந்த கடன் முழுவதையும் திருப்பிக் கொடுத்து விட்டார். இதனால், வேறு இடத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறி யுள்ளார். தன்னிடம் வேலைக்கு வரவில்லை என்ற ஆத்திரத்தில், வேலுவின் வீட்டிற்கு சென்று அறிவழகன், ரூ.20 ஆயிரம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், கடந்த 27ஆம் தேதி வேலுவை தாக்கி யுள்ளார். அப்போது, தடுக்க வந்த வேலுவின் மனைவி தங்கம்மாவை தகாத வார்த்தைகளால் பேசி குழந் தைகளை தூக்கி சென்றுள்ளார். பின்னர், அருகில் இருந்த குழந்தை களை மீட்டுள்ளனர். மிரட்டப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான வேலு, பூந்தோட்டத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வேலு ஞாயிறன்று (செப் 1) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, பெரியபாளையம் காவல் நிலையத்தில் என் கணவர் இறப்பிற்கு காரணமான அறிவழ கனை கைது செய்ய வேண்டும் என வேலுவின் மனைவி புகார் அளித் துள்ளார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே உயிரிழந்த வேலு வின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வேலுவின் உடலை வாங்க மறுத்து கிராமத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த அண்ணா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்ட இருளர் இன மக்கள் வசித்து வரு கின்றனர். அனைவரும் வயிற்று பிழைப்புக்காக சுற்றியுள்ள பூந்தோட் டங்களில் பூ பறிப்பதற்கு 10 மணி நேரம் வேலை செய்து வீடு திரும்புகின்றனர். சொற்ப கூலியாக ரூ 200 மட்டுமே பெறும் அவர்கள் வேலைக்கு சேரும் போது முன்பணம் வாங்குவது வழக்கம், வாங்கும் பணத்தை வேலையிலிருந்து நின்றபோது திருப்பி தருவது வழக்கம். ஆனால் வாங்கிய பணம் திருப்பிக் கொடுத் தாலும் வேறு எங்கும் வேலைக்கு செல்லக்கூடாது என்று மிரட்டல் விடுவதாகவும் தங்களிடம் மட்டும் தான் வேலை செய்ய வேண்டும் என்ற கொத்தடிமையாக அவர்களை நடத்துகின்றனர். இதுபோன்ற நிலைமை இப்பகுதி யில் வசிக்கும் அனைத்து குடும்பங் களிலும் நீடித்து வருகிறது.மேலும் வேலுவின் இறப்பிற்கு காரணமான அறிவழகனை உடனடி யாக கைது செய்யவும் பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.