திருவள்ளூர், ஆக 8-
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சியில் உள்ள கொண்டக்கரை கிராமத்தில் இயங்கி வரும் டோரண்ட் கேஸ் நிறுவ னத்தில் 200 கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கடந்த 4 ஆண்டு களாக பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு திடீ ரென சம்பளத்தை நிர்வா கம் குறைந்துள்ளது.
ஏற்கெனவே கொடுத்த சம்பளத்தை வழங்க வேண்டும், என கேட்டதற்கு 10 ஓட்டுநர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.இதனால் கடந்த 9 மாதங்க ளாக வேலையின்றி தவிக் கின்றனர். சம்பள உயர்வு மற்றும் பணிநீக்கம் செய் யப்பட்ட ஓட்டுநர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண் டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி திங்க ளன்று (ஆக-7), டோரண்ட் கேஸ் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதற்கு தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் மாநில பொதுச் செயலா ளர் கே.விஜயன் தலைம யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.இதில் மாநில பொருளாளர் ஜி.விநாயக மூர்த்தி, டோரண்ட் கேஸ் தொழிலாளர் சங்க ஒருங் கிணைப்பாளர் வழக்கறிஞர் ஆர்.கனகசபா மற்றும் ஓட்டு நர்கள் கலந்து கொண்டனர்.