districts

img

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கடலூர், ஜூலை 12- கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் பேருந்து நிலையம் கடைவீதி உணவகங்கள், குளிர்பான கடைகளில் உணவு பாது காப்பு துறை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது கடைகளில் உள்ள தின்பண்டங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை  நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தில் ஆய்வு செய்து செயற்கை நிறமிகள் கூட்டப்பட்டுள்ளதா, கலப்படங்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். விதிமுறைகளை மீறி கலப்படம் செய்வது கண்டறியப் பட்டால் சிறை தண்டனை உட்பட ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.