districts

img

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா 103வது பிறந்த நாளையொட்டி உணவு வழங்கும் நிகழ்ச்சி

விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா 103வது பிறந்த நாளையொட்டி ஞாயிறன்று (ஜூலை 28) குரோம்பேட்டையில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி 26வது வார்டு கிளை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் பேசினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி, பகுதிக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், கிளைச்செயலாளர் ஜி.கே.கண்ணன், எம்.சிவசங்கரன், எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.