காஞ்சிபுரம், பிப்.13 - சாம்சங் தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஒரு வேளை உணவை புறக்கணித்து சிஐடியு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம், 3 தொழிலாளர்களை தற்காலிக பணி யிடை நீக்கம் செய்ததை கண்டித்தும், தொழிலாளர்கள் மீது நிர்வாகம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் தொழிலாளர்கள் கடும் வெயில், பனி - குளிரையும் பொருட்படுத்தாமல் 9வது நாளாக சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில் சிஐடியு விடுத்த அறைகூவலை ஏற்று வியாழனன்று (பிப்.13) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் தொழிலாளர்களுக்கு ஹூண்டாய் மோட்டார் இந்தியா எம்ப்ளாய்ஸ் யூனியன், ஜே.கே டயர், யமஹா தொழிலாளர் சங்கம், ஏசியன் பெயிண்ட், டி.ஒய் ஆட்டோ இந்தியா தொழிற்சங்கம், தாய் சுமித் தொழிலாளர் சங்கம், யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ், லோட்டோ சாக்கோபை சாக்லேட், குரூப்போ, யுனி பிரைஸ் உள்ளிட்ட சிஐடியு உடன் இணைக்கப்பட்ட 58 தொழிற்சங்கத்தினர் இந்த போராட்ட த்தில் முழுமையாக ஈடுபட்டனர்.