districts

சென்னை முக்கிய செய்திகள்

கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

சென்னை, ஜன.18- சென்னை கோயம் பேட்டில் சனிக்கிழமையன்று பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.1,200ல் இருந்து ரூ.2,000க்கும், ஐஸ் மல்லி ரூ.900ல் இருந்து ரூ.1,700க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.500ல் இருந்து ரூ.700க்கும், கன காம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.900க்கும், அரளி பூ ரூ.150ல் இருந்து ரூ.200க்கும், சாமந்தி பூ ரூ.120க்கும், சம்பங்கி ரூ.100ல் இருந்து ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60ல் இருந்து 100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120ல் இருந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது.