கும்மிடிப்பூண்டி, நவ.30- கும்மிடிப்பூண்டியின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமரை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் கும்மிடிப்பூண்டி பஜார் மழைநீரில் மிதக்கிறது. கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமையன்று (நவ 30), காலை முதல் பெய்த கனமழை யால் தாமரை ஏரியின் உபரிநீர் கால்வாய் மற்றும் தூர்வாரப்படாத கும்மிடிப்பூண்டி பேரூராட்சி ஜிஎன்டி -யில் மழைநீர் வடி கால்வாய்கள் நிரம்பி ஜிஎன்டி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கழிவுநீருடன் மழை நீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்தக் கழிவு நீர் ஜிஎன்டி சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததால் தொற்றுப் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஜிஎன்டி சாலை வழியாக செல்லக்கூடிய சொகுசு கார்கள் ஆட்டோக்கள் பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் என அனைத்துவித வாக னங்களும் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளும், நெடுஞ்சாலை துறை அதி காரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை கோட்டைவிட்டதே இதற்கு காரணம் என்கிறார்கள். அதேபோல் தாமரை ஏரி ஒட்டி உள்ள திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிகள் கழிவுநீரால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரியின் வரத்து கால்வாய்களில் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து கொண்டு வரப்படும் மனித மலக்கழிவுகள், ரசாயன கழிவுகள் சட்ட விரோதமாக டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வந்து கொட்டப்படுவது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதால் மழைநீர் மற்றும் கழிவுநீரால் கும்மிடிப்பூண்டி மிதக்கிறது. இதனை போக்க ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.