வெள்ளத்தால் பாதித்த மாணவர்கள் கட்டணமில்லாமல் இன்று சான்று பெறலாம்
சென்னை,டிச.11- சென்னையில் புயல் மற்றும் பெரு மழை மழை பாதிப்பால் சேதமடைந்த சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை (டிச.12) கட்டணமில்லாமல் பெறலாம். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமை யான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசு சான்று, பள்ளி, கல்லூரி சான்றுகள் மற்றும் அரசு ஆவணங்களை இழந்தவர்கள். அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொது மக்களுக்கு கட்டணமின்றி அதை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் டிச.12 அன்று நடைபெறுகிறது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் செயல்படும் 46 பகுதி அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூரில் 20 சதுர கி.மீ பரவிய கச்சா எண்ணெய்
சென்னை, டிச. 11- மிக்ஜம் புயலின் போது சிபிசிஎல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டி 20 சதுர கி.மீ. கடல் பகுதியில் பரவியுள்ளது தெரியவந் துள்ளது. சென்னை அருகே உள்ள சிபிசிஎல் ஆலையிலிருந்து மிக்ஜம் புயலின்போது கச்சா எண்ணெய் வெளியேறியது. இந்த எண்ணெய் எண்ணூர் பகுதியில் கடலில் கலந்து வரும் நிலையில் சுற்றுச்சூழலுக்கும், மீன் வளத்திற்கும் கச்சா எண்ணெய் கலந்த நீரால் பொது மக்களும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இந்நிலையில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம், கச்சா எண்ணெய் பரவிய கடல் பகுதி மீது பரந்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்திலிருந்து காசிமேடு துறைமுகம் வரை சுமார் 20 சதுர கி.மீ. பரப்பள விற்கு கச்சா எண்ணெய் பரவியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கிடையே கடலோர காவல்படை கப்பல் மூலம் எண்ணெய் அகற்றும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இது தவிர நிலப்பகுதிகளில் பரவியுள்ள கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உதவ கடலோர காவல்படையின் நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஏற்கெனவே மிக்ஜம் புயலின் தாக்கத்தால் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் அப்பகுதி மக்கள், கூடுதலாக இந்த எண்ணெய் கலப்பு பிரச்சனையால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
5 நாட்களில் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம்
சென்னை, டிச.11 - சென்னையில் பெய்த கனமழைக்கு பிறகு வெள்ளநீர் அகற்றப்பட்ட பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் டன் கணக்கில் குப்பைகள் இருப்பதால் அவற்றோடு போராடும் நிலைமைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 24 ஆயிரம் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள். கடந்த 6, 7 ஆம் தேதிகளில் சுமார் 12 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டி ருந்தன. கடந்த 3 நாட்களில் மேலும் குப்பைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடந்தது. நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் குப்பைகளை குப்பை கிடங்குகளில் கொண்டு செல்லப்பட்டன. கடந்த 5 நாட்களில் சுமார் 30 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இன்னும் நூற்றுக்கணக்கான தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே சென்னையில் இன்னும் 10 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றப்படும் என்று தெரிகிறது. ஆனால் குப்பைகளை கொட்டுவது தான் கடும் சவாலாக மாறி வருகிறது. பெரும்பாலான மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் வெற்றிடங்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதற்கு சில பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் தண்ணீர் தேங்கிய 359 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சாலை மற்றும் தெருக்களில் விழுந்த 1,351 மரங்களில் 1,255 மரங்கள் அகற்றப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் 726 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 51,158பேர் பரிசோதனை மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் 22 ஆயிரம் பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
திருவொற்றியூர் ஆதிதிராவிடர் காலனியில் ஆணையர் ஆய்வு
சென்னை, டிச. 11- திருவொற்றியூர் மண்டலத்தில் மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளையும், 4ஆவது வார்டுக்குட்பட்ட ஆதிதிராவிடர் காலனியில் எண்ணெய் கழிவுகள் படிந்துள்ள வீடுகளையும் சென்னை மாநகராட்சி ஆணையர் ெஜ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆயில் படிந்த வீடுகள் அனைத்தையும் பட்டியல் எடுக்க வேண்டும். இங்கு வசிப்பவர்களுக்கு வேறு பகுதி முகவரியில் ஆதார், ரேசன் கார்டு இருந்தாலும் அவற்றையும் கணக்கெடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் ஒருவரை கூட நிராகரிக்க கூடாது என்று அறிவுறுத்தினார். இந்த பகுதி மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், அனைத்து பாதித்த பகுதிகளிலும் தினசரி மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும், வளர்ப்பு பிராணிகளுக்கு என தனியாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆயில் கசிவுக்கு காரணமான சிபிசில் மற்றும் பெட்ரோ ப்ராடக்ட் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், ஆயில் படிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ெஜயராமன், கல்வித்துறை துணை ஆணையர் சரண்யா ஹரி, மண்டல அலுவலர் நவீந்திரன், மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் லீனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெள்ளப் பாதிப்பு: பொன்னேரியில் முழுமையாக பார்வையிட வேண்டும்
ஒன்றிய அரசின் குழுவுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
திருவள்ளூர், டிச. 11- மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மதிப்பீடு செய்ய வந்துள்ள ஒன்றிய அரசின் குழு பொன்னேரி வட்டத்தில் பாதித்துள்ள அனைத்து கிராமங்களையும் பார்வையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. டிசம்பர் 4 அன்று வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் மற்றும் மழை திருவள்ளூர் மாவட்டத்திலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொன்னேரி வட்டம் அதிகம் பாதித்த பகுதியாக உள்ளது. ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு ஏராளமான கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மக்களின் உடமைகளும் நெற்பயிர் சேதமடைந்துள்ளது. கால்நடைகளும் உயிரிந்துள்ளது. பழவேற்காடு பகுதியில் 40 மீனவ குப்பங்கள் தண்ணீர் சூழ்ந்து இரண்டு நாட்களாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. அத்தியா வசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். நான்கு நாட்களாக மின்சார வசதி இல்லை. படகுகள் கட்டு மரங்களும் மீன்பிடி சாதனங்கள் ஏராளமாக சேதமடைந்துள்ளது. பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் செய்திருந்த சாகுபடிகள் நெல் பயிர், மா, வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அறிக்கையிலும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்த மல்லி, ஆவடி பகுதிகள் முழுமையாக பாதிப்புக்கு உள்ளானது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வட்டத்திலும் குடியிருப்பு களுக்குள் தண்ணீர் சூழ்ந்தது. பயிர் சேதம் அதிகம் ஏற்பட்டது. திருத்தணி, ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு வட்டங்களிலும் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர் மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து பழங்குடியினர், வாடகை வீட்டில் தங்கி இருப்பவர்கள், பணி நிமித்தமாக மாவட்டத்தில் தங்கி உள்ளவர்கள் என அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பில் அதிகமான சேதாரம் ஏற்படுத்தியுள்ள பொன்னேரி மற்றும் பழவேற்காடு பகுதிக்கு ஒன்றிய அரசின் குழு வருகை தந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
கடலூர்,டிச.11- ஆந்திராவுக்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி 26 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை விழுப்புரம் சரக துணை கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் புவனகிரி வட்டம், சாமியார் பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் வெங்காய மூட்டைகள், பூண்டு மூட்டைகள் இருந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சரக்கு வாகனம் முழுவதும் சோதனை செய்தபோது, அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சரக்கு வாகனத்தில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுரேஷ், மகேந்திரன், வீரபாபு, அன்னமய்யா என்பதும் பூண்டு சின்ன வெங்காயம் வியாபாரம் செய்வது போல் தமிழ்நாட்டில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். மேலும் 26 மூட்டைகளில் இருந்து 1300 கிலோ ரேசன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
செங்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
திருவண்ணாமலை,டிச.11- திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்து உள்ளது பி.எல்.தண்டா. இது அதிகளவு தரைக்காடுகள் உள்ளடக்கிய பகுதியாகும். இங்கு உள்ள தரை காடுகளில் வன விலங்குகளை மர்ம நபர்கள் அவ்வப்போது வேட்டையாடி வருகின்றனர். இந்நிலையில் பி.எல்.தண்டா பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்கிற முதியவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் சட்டவிரோதமாக வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில், 37 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்திய வெடி பொருட்கள் இருப்பது கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.17.60 கோடிக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்
சென்னை, டிச.11 மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 34 மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் மிக்ஜம் புயல் மற்றும் மழையினால் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு உதவு வதற்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ரிப்பன் கட்டடத்திலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலு வலகத்தில் கடந்த டிச.6ஆம் தேதி முதல் இயங்கி வரு கிறது. பல்வேறு மாவட்ட நிர்வாகங்களின் வாயிலாக பெறப்படும் நிவாராணப் பொருட்கள் வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு, தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 10,77,000 குடிநீர் பாட்டில்கள், 3,02,165 பிரெட் பாக்கெட்டுகள், 13,08,847 பிஸ்கட் பாக்கெட்டுகள், 73.4 டன் பால்பவுடர், 4,35,000 கிலோ அரிசி, 23,220 கிலோ உளுந்து மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் 82,400 பெட்ஷீட்டுகள் மற்றும் லுங்கிகள், நைட்டிகள், பிளாஸ்டிக் பக்கெட்டுகள், குவளை கள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், என ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் 34 மாவட்டங்களி லிருந்து பெறப்பட்டு, 15 மண்டலங்கள், செங்கல்பட்டு மற்றும் திரு வள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சிகள், குன்றத்தூர் நக ராட்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.