கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க புதுவை அதிகாரிகளுக்கு காலக்கெடு நிர்ணயம்
புதுச்சேரி, செப்.8- கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக புதுச்சேரி அரசு அதிகாரி களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு கோப்புகள் தயாரிப்பது, ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவற்றில் காலதாம தம் ஏற்படுவதாகவும், பொது மக்களு க்கான திட்டங்கள் மக்களை உரிய நேரத்தில் சென்றடைவது பாதிக்கப்படு வதாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்ற னர். ஒரு சில அதிகாரிகள் விளக்கங்கள் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பு வதாக முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், அரசு நிர்வாகத்தை விரைவுபடுத்த தலைமை செயலாளர் சரத் சவுகான் நடவடிக்கை எடுத்துள் ளார். கோப்புகள் எந்தெந்த அதிகாரி கள் மட்டத்தில் எவ்வளவு நாட்கள் இருக்கலாம் என்றும் அவர் சில நாட்க ளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செய லாளர் சுந்தரராஜன் அனைத்து துறை களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: பொதுநலன் சார்ந்த விஷயங்கள், கோப்புகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும், உரிய நேரத்தில் தீர்வு காண்பதை உறுதி செய்யவும், நிலை யான உத்தரவில் பல்வேறு நிலைகளில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கு ஏற்கெனவே காலக்கெடு விதிக்கப்பட் டுள்ளது. அதன்படி துறைத்தலைவர்கள் (இயக்குநர்) மட்டத்தில் 10 நாட்களும், செயலாளர்கள் அளவில் 7 நாட்களும் கோப்புகள் இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் நிர்வாகத்தின் செயல்பாட்டை பாதிக்கும். எனவே, சிறந்த நிர்வாகம், பொதுசேவையை திறம்பட வழங்குவதை உறுதி செய்ய இந்த காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செப். 9 முதல் திண்டுக்கல்லில் பாரம்பரிய, ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
திண்டுக்கல், செப்.8- திண்டுக்கல்லில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் வாழும் குழந்தை கள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதி யோர் ஆகியோருக்கு போதிய ஊட்டச் சத்து விழிப்புணர்வு இல்லாமல் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறு தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடை பெற உள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 306 ஊராட்சிகளில் செப்.9 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300, இரண்டாம் பரிசாக ரூ.200, மூன்றாம் பரிசாக ரூ.100 வழங்கப்படவுள்ளது. வட்டார அளவிலான போட்டிகள் 14 வட்டங்களில் செப்.16 முதல் 20 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவில் செப்.25ம் தேதி அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.4000, மூன்றாம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். மேலும், 2 நபர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் சிறப்பு பரிசு, 3 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000, சான்றிதழ்களும் வழங்கப் பட உள்ளன.