districts

img

25 ஆண்டுகளாக ஊதிய நிர்ணயம் இல்லை; அரசாணை, நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிப்பு

நாகர்கோவில், ஜன.18- கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழி யர்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு  ஊதியக்குழு நிர்ணயம் செய்த சம்பளம் வழங்கப்படவில்லை. இது தொடர்பான அரசாணையையும் உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் அளித்த வாக்குறுதியை யும் குமரி மாவட்ட அறநிலையத்துறை நிறைவேற்றவில்லை. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கன்னியாகுமரி மாவட்ட திருக் கோவில்கள் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 490 கோவில்கள் உள்ளன. இதில் கன்னி யாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் தாணுமாலையசாமி,  நாகர்கோவில் நாகராஜா,  மண்டைக்காடு அம்மன் கோவில் கள், பன்னிரு சிவாலய திருத்தலங்கள் போன்ற வருவாய் ஈட்டும் பெரிய கோவில் களும், இவற்றைச் சார்ந்த சிறு கோவில்களும் உள்ளன. இந்த கோவில் களை பராமரிக்க, 25 ஆண்டுகளுக்கு முன்பு 1130 ஊழியர்கள் அரசால்  நியமனம் பெற்று பணியாற்றியுள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாக - சுமார் 350 ஆக சுருங்கிவிட்டது.

வறுமையில் சில்லறை பணியாளர்கள் 

தமிழ்நாடு அரசு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்துறை 2020  செப்டம்பர் 4 ஆம் தேதி பணியாளர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு இந்து சமய நிறுவனங் களின் பணியாளர்கள் (சேவை நிபந்த னைகள்) விதிகளின்படி புறம்பணியா ளர்கள் (Outdoor Employees), உள்பணி யாளர்கள் (Indoor employees) என வரை யறுக்கப்பட்டுள்ளது. இதில் புறம்பணி யாளர்களாக குறிப்பிடப்படும் மேலாளர் முதல் எழுத்தர் போன்றவர்களுக்கு அரசு பணியாளர்களுக்கான தகுதியும் சம்பளமும் உண்டு. அர்ச்சகர் முதல்  துப்புரவு பணியாளர் வரை உள்பணி யாளர்களாக குறிப்பிட்டாலும் குமரி மாவட்டத்தில் சில்லறை  செலவின ஊழி யர்கள் என புறக்கணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.  1997இல் பாகுபாட்டோடு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டும் அதுகூட கிடைக்காமல் 25 ஆண்டுகளாக வறுமை யில் வாடும் நிலையில் ஊழியர்கள் உள்ள னர். இந்த காலத்தில் ஓய்வு பெற்ற 200க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட பயன்கள் கிடைக்கவில்லை. 800 பேருக்குமேல் ஈட்டிய விடுப்புத் தொகைகிடைக்க வில்லை. நூற்றுக்கணக்கானோர் வறுமையில் வாடி மரணத்தை தழுவினர். பணிக்காலத்தில் உயிரிழந் தோரின் வாரிசுகளுக்குகூட வேலை வழங்கப்படவில்லை. இவற்றை சுட்டிக்காட்டி குமரி மாவட்ட ஆலய ஊழி யர் சங்கம் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் மீது கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி நீதியரசர் எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பளித்துள்ளார். அதில் 12 வாரங் களுக்குள் ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளார்

பழிவாங்கப்படும் ஊழியர்கள் 

ஆனால், 8 மாதங்கள் கடந்த பின்னும் இந்த உத்தரவை அமல்படுத்த எந்த நடவடிக்கையையும் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்கிறார் குமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) மாவட்டச் செயலாளர் அஜி குமார். மேலும் அவர் கூறுகையில்,  ஊதிய நிர்ணயம் செய்வதற்கான 1998 அர சாணை, ஊதிய மறுவரையறைக்கான 2020 அரசாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை குமரி மாவட்ட ஆலய நிர்வாகம் நிறைவேற்றவில்லை. ஊழி யர்கள் மீதான பழிவாங்கலுக்கு எதிரான உத்தரவுகளிலும் அதே நிலைப்பாடு தொடர் கிறது. உதாரணமாக புலியூர்சாலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கோவிலில் பணியாற்றிய என்மீதும், என்.சந்திரன், வி.ஸ்ரீகிருஷ்ண சர்மா மீதும் நடந்த பழிவாங்கலுக்கு எதி ரான வழக்கின் தீர்ப்பை கூறலாம். தீர்ப்பின்படி ஊழியர்களின் பணி நிலை மைகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இதுவரை குமரி மாவட்ட ஆலய நிர்வாகம் முன்வரவில்லை என்றார்.   குமரி மாவட்டத்தில் உள்ள அறநிலை யத்துறைக்கு சொந்தமான கோவில் களை மையமாக கொண்டு வகுப்புவாத சங்பரிவார் அமைப்புகள் பாஜக வுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன. அவர்கள் சேவா சமிதி, பக்தர் சபா, கலா  மன்றம் போன்ற பெயர்களில் செயல்படு கிறார்கள். கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களை இவர்கள் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதில் ஏற்படும் மோதல்களில் ஊழியர்கள் தரப்பு நியாய த்தைக்கூட கருத்தில் கொள்ளாமல் பழி வாங்கலுக்கு அதிகாரிகள் துணை  போகிறார்கள். இந்து மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்னும் குரல் வலுப்பெற அதிகாரிகளே துணை போவ தாக கூறுகிறார்கள் ஊழியர்கள்.  ஊழியர் பற்றாக்குறையால் பணி களில் சுணக்கம் ஏற்படும்போது சங்பரி வார் அமைப்பினர் தலையிட்டு தங்களது கட்டுப்பாட்டுக்குள் கோவிலை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அதிகாரிகள் இதற்கு துணை போகிறார்கள். முறை யான சம்பளத்துடன் புதிய பணிநிய மனங்கள் இல்லை என்கிற அரசின் நிலை ப்பாடு இதற்கு உதவிகரமாக அமை கிறது. கடந்த ஆண்டு, 142 தற்காலிக பணி யாளர்கள் தினசரி ரூ.100 சம்பளத்தில் நிய மிக்கப்பட்டனர். இதில் பலரும் ஓய்வு  பெற்ற ஊழியர்களாவர். கோடிக்கணக் கான ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்,  சொந்த வருவாயும் உள்ள கோவில் கள்கூட பணியாளர் பற்றாக்குறையால் திணறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். 

கோரிக்கைகள்

நீதிமன்ற தீர்ப்பின் படி உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். பழிவாங்கப் பட்ட ஊழியர்கள் தொடுத்த வழங்கின் தீர்ப்பை அமல்படுத்து. வருடாந்திர ஊதிய  உயர்வை வழங்கு. தகுதியான ஊழியர் களுக்கு பதவி உயர்வு வழங்கு. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை, ஈட்டிய விடுப்புத் தொகை உடனே வழங்கு. பணிக்காலத்தில் உயிரிழந்தோர் வாரிசு களுக்கு வேலை வழங்கு. ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு 2019 அரசு உத்தரவு அடிப்படையில் நிலுவை ஊதியம் வழங்கிடு. முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - சி.முருகேசன்