districts

img

மீன் பிடி வலைகள் எரிந்து நாசம்

திருவள்ளூர், ஜூலை 27- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே உள்ள அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரையில் வைத்துச்சென்ற மீன் பிடி வலைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது.  இதுகுறித்து காவல்துறையினர்,மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் வெள்ளியன்று (ஜூலை 26), சென்னை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா,திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். அப்போது மீனவப் பெண்கள் இப்பிரச்சனையால் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கதறி அழுத்தனர். கடந்த சில மாதங்களாக பழவேற்காடு பகுதியில் மீன்பிடி  வலைகள் எரிக்கப்படுவது குறித்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி எரிந்து சாம்பலான  வலைகளையும் மீட்கப்பட்ட வலைகளையும் பார்வை யிட்டனர். ஆய்வுக்கு பின்னர் அரங்கம் குப்பம் மீனவ கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை