districts

img

சிதம்பரம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம்: ஒருவர் உடல் மீட்பு

சிதம்பரம், ஜன.20- சிதம்பரம் அருகே சின்ன  வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் செல்வம் (48),  தயாளமூர்த்தி(55) ஆகிய இருவரும் வெள்ளிக் கிழமை (ஜன.21) முடசல் ஓடை முகத்துவாரம் வழி யாக கடலில் மீன் பிடி க்கச் சென்றுள்ளார். பின்னர், இரவு கரைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்பாராத வித மாக முடசல்ஓடை முகத்து வாரப் பகுதியில் இவர்க ளது படகு அலையில்  சிக்கி கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை(ஜன.20) அதிகாலை சின்ன வாய்க் கால் கடற்கரை ஓரம் செல்வத்தின் உடல் கரை  ஒதுங்கியது. மீனவர் தயாளமூர்த்தி உடல் கிடைக் கவில்லை. அவரது உடலை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படை, வனத்துறை, காவல் துறையினர் உதவியுடன் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவர் கள் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை பேரூராட்சி துணைத் தலை வர் கிள்ளை ரவீந்திரன் மற்றும் பேரூராட்சி உறுப் பினர்கள் செய்து வருகின்ற னர்.