நொச்சிக்குப்பம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று (ஏப்.18) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி மீனவ பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். உடன் கட்சியின் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் உள்ளனர்.