districts

மக்களவைத் தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாகட்டும் கல்வி

உலகில் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த  கேரள மாநிலத்தில் தோழர் இ. எம். எஸ். தலை மையில் அமைந்த அரசு கேரளா கல்வி மசோதா 1957 அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஐந்தாம் வகுப்பு வரை தனியார் நடத்தி னால் கூட கட்டணம் வாங்கக் கூடாது என்ற பிரிவை உள்ளடக்கியதாக இருந்தது‌. இன்றைய பின்லாந்து நாட்டிற்கு முன்னோடியாக கேரள கல்வி மசோதா அமைந்தது என்றால் மிகையாகாது.‌ குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா செல்ல, குடியரசுத் தலைவர் அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்ப, அனைவருக்கும் கல்வி தரும் பொறுப்பை ஒரு மாநில அரசு ஏற்க முன்வந்துள்ளது அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கடமையை நிறைவேற்றும் வகை யில் உள்ளது, இம்மசோதா யாருடைய அடிப்படை உரிமைகளையும் பறிக்க வில்லை, எனவே இம்மசோதா ஏற்பு டையதே என்று தீர்பளித்தாலும், சில பிரிவுகளை மட்டும் ரத்து செய்தது. தனியார் நடத்தினாலும் ஐந்தாம் வகுப்பு வரை கட்டணம் வாங்கக் கூடாது‌ என்ற‌ பிரிவு ரத்தானதால் அது மட்டும் சாத்தியப் படாமல் போனது. கல்வி வியாபாரிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் ஆட்சியே போனாலும் அரசமைப்புச் சட்டம் தந்த கடமையை நிறைவேற்றுவோம் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடு கேரள கல்வி மசோதாவை சட்டமாக்க முடிந்தது.  தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிந்தித்ததை நடத்திக் காட்டினார் காமராசர். குடியிருப்புகள் தோறும் பள்ளிகள்‌ என்ற இலக்கை அடைய காமராசர் வித்திட்டார்.  மாநில அரசுகள் தங்களின் வசதிபடி பள்ளிகளை உருவாக்கியது. உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. இன்றைய தேதி வரை அனைவரும் படிக்கும் பொதுப் பள்ளிக்களை மாநில அரசுகள் மட்டுமே நடத்துகின்றன. பெரும் பகுதி இப்பள்ளிகளில் எந்த கட்டணமும் இல்லாமல் அனைத்து மாணவர்களையும் மாநில அரசுகள் படிக்க வைக்கின்றன என்பதே பெரும் உண்மை. 

ஒன்றிய அரசு நடத்துவது சிறப்பு பள்ளிகள் மட்டுமே. குறிப்பிட்ட பிரிவினருக்கு, குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவான பள்ளிகளே கேந்திர வித்யாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகள்.  உயர்கல்வியிலும், அனைவரும் படிக்கும் கலை, அறிவியல், தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக் கழகங்களை மாநில அரசுகளே உரு வாக்கி நடத்துகின்றன. ஒன்றிய அரசு நடத்துவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது உயர் சிறப்பு கல்வி நிறுவனங்கள் மட்டுமே.  ஆக, மாநிலங்கள் தங்கள் மக்களின் தேவை உணர்ந்து, தங்களின் வசதிகளை கருத்தில் எடுத்து கல்வி நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டன. மாநில அரசின் திட்டங்கள், மாநில அரசின் முயற்சிகள், மாநில அரசின் நிதி ஆகியவையே இன்று இந்திய கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியுள்ளது.  மாநில அரசு பள்ளிகளில் பயின்று, மாநில அரசு உயர் கல்வி நிறுவனங்கள் உயர் கல்வி பயின்றவராகளே இன்று சந்திர மண்டலம் தொடங்கி  சூரிய மண்டலம் வரை ஆய்வு செய்து இந்தியா விற்கு பெருமை சேர்ந்து மட்டுமல்லாமல் உலகிற்கே பெரும் அறிவுக் கொடை வழங்கி வருகின்றனர்.‌ அத்தகைய மாநில அரசுகளை சொல்வதைச் செய்யும் முகமைகளாக மாற்றும் சூழ்ச்சிகரபாதை ஆவணம் தான் தேசியக் கல்விக் கொள்கை 2020. 

ஜம்மு/காஷ்மீர் பிரிக்கப்பட்டு மாநில அந்தஸ்தை இழந்து ஒன்றியப் பிரதே சங்களாக மாற்றியது ஏற்க இயலாது என்பதை லடாக் மக்கள் தங்களின் வாக்குச் சீட்டை பயன்படுத்தும் முதல் சந்தர்பத்திலேயே நிருபித்து உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் நேரடி யாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்கும் அபாயகரமான ஆவணம் தான் தேசியக் கல்விக் கொள்கை 2020 என்பதை பெரும் பகுதி யினர் உணர்வில்லை.  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேரெதிரான ஆவணம் என்பதால்தான் இந்தியா முழுக்க தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுகிறது.‌ மாநில அரசுகள் படிப்படியாக கல்வியை பரவலாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த முயற்சிகள் டாப் சிலிப் மலைப் பகுதி வரை அடைவதற்கு முக்கால் நூற்றாண்டு ஆகியிருக்கலாம், ஆனால், தேசியக் கல்விக் கொள்கை 2020 மலைப் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருந்தால் அங்கெல்லாம் சமகற்றல் வாய்ப்பை உறுதி செய்ய முடியாது அந்த பள்ளி களை இணைத்து விடுங்கள் என்கிறது. பள்ளிகளை இணைத்தல் என்றால் என்ன? ஏதோ ஒரு பள்ளியை அல்லது சில பள்ளிகளை மூடுங்கள் என்பதுதானே அதன் விளைவு. 

மலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் வாழ்விடத்திற்கு அருகில் சம வாய்ப்பு உள்ள பள்ளிகளை பெறும் அடிப்படை உரிமை இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது.  அதற்கு மாற்றாக ஒட்டு மொத்த கல்வியையும் எழுத்தறிவு, எண்ணறிவு, வேலைத் திறன் என்று பள்ளிக் கல்வித் தொடங்கி உயர் கல்வி வரை கல்வியின் நோக்கத்தை சிதைக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020யை நிராகரிக்க வேண்டும் என்று கோருவது ஒன்றே கல்வியை மேலும் பரவலாக்க உதவும். கடலோர மக்கள் தொடங்கி மலைவாழ் மக்கள் வரை உழைக்கின்ற மக்களின் பண்பாடுகளை  அழித்தொழிக்கும் சூழ்ச்சி நிறைந்த ஆவணமே தேசியக் கல்விக் கொள்கை 2020.  அனைத்து நிலையிலும், அனைத்து வகைக் கல்வியையும் அனைவரும் கற்க முடியும் என்ற நிலையை மாற்றி, மீண்டும் இந்தியாவை அரைநூற்றாண்டு பின்னுக்கு இழுக்கும் சூழ்ச்சிகரமான தேசியக் கல்விக் கொள்கை 2020யை நிரா கரிப்போம்.‌ மாநிலங்கள் தங்களின் தேவை களுக்கு ஏற்ப கல்வியை பரவலாக்கும் திட்டங்களை வகுத்துக் கொள்ள‌ இந்திய அரசமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு உரிமைத் தந்துள்ளது. அத்தகைய உரிமையை உணர்ந்து, மாநில அரசுகள் மக்களுக்கு சமமான கற்றல் வாய்ப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  தமிழ்நாடு, அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில மக்கள் தேசியக் கல்விக் கொள்கை 2020 நிராகரிக்கவும், மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திடவும் தங்க ளின் இறையாண்மையைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளனர்.‌ மேலும், நடக்க இருக்கின்ற பல்வேறு மாநிலத் தேர்தல்க ளிலும் கல்வி மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.  மக்களவைத் தேர்தலிலும் கல்வி முக்கிய விவாதப் பொருளாக அமையும்.

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.