districts

img

மக்களைத் தேடி மருத்துவ திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க

திருவள்ளூர், நவ. 25- மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தவேண்டும் என்று மக்களை தேடி மருத்துவ திட்ட ஊழியர் சங்க (சிஐடியு) திருவள்ளூர் மாவட்ட முதல் மாநாடு வலியுறுத்தியுள்ளது. மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமையன்று (நவ 25), தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் நடை பெற்றது.இதற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் என்.சுகன்யா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.ரெபேக்காமேரி வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் துவக்கி வைத்து பேசினார்.சிஜடியு மாவட்டச் செயலாளர்  கே.ராn ஜந்திரன், உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ஜி.சந்தானம், புதுவாழ்வு திட்டத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்அரசு, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சித்ரா  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.சங்கத்தின் மாநில துணைச் செய லாளர் கே.கிரிஜா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.சிவரஞ்சனி நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக என்.சுகன்யா, மாவட்டச் செயலாளராக பி.ரெபேக்காமேரி, பொருளாளராக எஸ்.சிவரஞ்சனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,  குறைந்த பட்சம் மாத ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், பிரதி மாதம் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், பணி நேரத்தின் போது போக்குவரத்து படி, உணவுப்படி வழங்க வேண்டும், பணி நேரம் நிர்ணயம் செய்து முழுநேர ஊழியராக்க வேண்டும்,  ஊழியர்களின் ஊதியத்தை நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும், ரூ.2000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்,  சீருடை, அடையாள அட்டை, கைபேசி வழங்க வேண்டும்,  மாத ஊதியத்தில் ஸ்கோரிங்கார்டு முறையை புகுத்தி ஊதி யத்தை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.