காணும் பொங்கல்: சென்னையில் 500 சிறப்பு பேருந்துகள்
காணும் பொங்கல்: சென்னையில் 500 சிறப்பு பேருந்துகள் சென்னை, ஜன. 15- காணும் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை சென்னையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் செவ்வாயன்று (ஜன.14) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து புதனன்று உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து விவசாயத்திற்கு பேருதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவார்கள்.
காணும் பொங்கல்: மெரினா கடற்கரைக்கு செல்வோர் வாகனங்களை நிறுத்த தனி இடம்
சென்னை, ஜன. 15- காணும் பொங்கல் இன்று (ஜனவரி 16) கொண்டாடப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடு முறையை கழிக்க மக்கள் உள்ளூரில் உள்ள சுற்றுலா இடங்கள், வெளி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குவிந்து வருகின்றனர். வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. எனவே, பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் அதிகம் கூடுவர். தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நாளன்று மக்கள் தங்கள் குடும்பத்துடன், சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள். சென்னையைப் பொறுத்தவரை மெரினா கடற்கரை, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணல் பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியில் ஈடுபடுவார்கள். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறை யில் உள்ள அகண்ட திரையில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப் படுகிறது. மேலும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தை (ஜனவரி 16) முன்னிட்டு மெரினா கடற்கரை அருகே பொது மக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த முன்னேற்பாடுகளை சென்னை காவல்துறை செய்துள்ளது. அதன்படி, ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம், ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), MRTS-சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு, மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச்செயலகத்திற்கு எதிரே), செயின்ட் பேட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்) ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
காசிமேட்டில் ரவுடி வெட்டிக் கொலை: 6 பேர் கைது
சென்னை, ஜன. 15- சென்னை காசிமேடு திடீர் நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் (33). இவர் மாலதி (30) என்பவருடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று இரவு இருவரும் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம கும்பல் உலகநாதனை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க வந்த மாலதியையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே உலகநாதன் பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாலதியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உலகநாதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வல்லரசு , அந்தோணி, எபிநேசர், எழிலரசன், மனோஜ், குணசேகரன் ஆகிய 6 இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாலதி பல ஆண்டுகளாக கஞ்சா வியாபாரம் செய்து வருவதாகவும், அவருக்கு பாதுகாப்பாக உலகநாதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்ளனர். கடந்த ஆண்டு மற்றொரு ரவுடியான தேசிங்கு, மாலதி வீட்டுக்கு கஞ்சா வாங்க வருபவர்களை எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் உலகநாதனின் மறைமுக ஏற்பாட்டில் வெங்கடேஷ் என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் ரவுடி தேசிங்கை வெட்டி கொன்றனர். மேலும் குற்றவாளிகளை ஜாமினில் வெளிக்கொண்டுவர உலகநாதன் உதவியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி தேசிங்கின் மகன் வல்லரசு தனது நண்பர்களுடன் இணைந்து உலகநாதனையும், மாலதியும் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். அந்த பகுதியில் கஞ்சா வியாபாரம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சாலை விபத்தில் மாமனார், மருமகன் உயிரிழப்பு
அம்பத்தூர், ஜன. 15- அம்பத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் மாமனார், மருமகன் உயிரிழந்தனர். அம்பத்தூர், ஐசிஎப் காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). இவர் காய்கறி வியாபாரி. இவரது மகன் குறளரசன் (8). இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாரிமுத்து இரு சக்கர வாகனத்தில் தனது மாமனார் ரகுபதி (52), மகன் குறளரசன் ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார். குறளரசன் இரு சக்கர வாகனத்தில் முன் பகுதியில் நாய்க்குட்டியை வைத்திருந்தார். இவர்களுடன் மாரிமுத்து இரு சக்கர வாகனத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று நாய்க்குட்டி இரு சக்கர வாகனத்தில் இருந்து சாலையில் குதித்தது. இதனால் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையின் மையத்தடுப்பு மீது மோதி மூவரும் கீழே விழுந்தனர். இதில் மாரிமுத்து, ரகுபதி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறளரசன் சிறு காயத்துடன் உயிர் தப்பினான். தகவல் அறிந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஐடி வளாகம் பாதுகாப்பாக இருக்கிறது சென்னை ஐஐடி விளக்கம்
சென்னை, ஜன.15- ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்த லுக்கு உள்ளானது குறித்து சென்னை ஐஐடி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ (ஜன. 14) மாலை 5.30 மணியளவில், வேளச்சேரி-தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற ஆண் மாணவர்களும், சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும், குற்றவாளியைப் பிடித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் பிடித்து சென்னை ஐஐடி-க்கு தகவல் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு பேக்கரியில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை. சென்னை ஐஐடி வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்குகிறது.” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
காணும் பொங்கல்: மெரினா கடற்கரைக்கு செல்வோர் வாகனங்களை நிறுத்த தனி இடம்
சென்னை, ஜன. 15- காணும் பொங்கல் இன்று (ஜனவரி 16) கொண்டாடப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடு முறையை கழிக்க மக்கள் உள்ளூரில் உள்ள சுற்றுலா இடங்கள், வெளி மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் குவிந்து வருகின்றனர். வியாழக்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. எனவே, பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் அதிகம் கூடுவர். தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நாளன்று மக்கள் தங்கள் குடும்பத்துடன், சுற்றுலா தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பார்கள். சென்னையைப் பொறுத்தவரை மெரினா கடற்கரை, தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் மெரினாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. காணும் பொங்கலையொட்டி உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணல் பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியில் ஈடுபடுவார்கள். 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறை யில் உள்ள அகண்ட திரையில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப் படுகிறது. மேலும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தை (ஜனவரி 16) முன்னிட்டு மெரினா கடற்கரை அருகே பொது மக்களின் வசதிக்காக வாகனங்களை நிறுத்த முன்னேற்பாடுகளை சென்னை காவல்துறை செய்துள்ளது. அதன்படி, ஃபோர்ஷோர் சாலை, விக்டோரியா வார்டன் விடுதி, கலைவாணர் அரங்கம் பார்க்கிங், மாநிலக் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம், ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை), MRTS-சேப்பாக்கம், லேடி வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரி, சீனிவாசபுரம் லூப் ரோடு, மைதானம், பொதுப்பணித்துறை மைதானம் (தலைமைச்செயலகத்திற்கு எதிரே), செயின்ட் பேட் மைதானம், அன்னை சத்யா நகர், ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்) ஆகிய இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
தீக்கதிர் செய்தி எதிரொலி விழுப்புரம் மாவட்டத்தில் கூடுதலாக 23 நெல் கொள்முதல் நிலையங்கள்
விழுப்புரம், ஜன.15- விழுப்புரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யம் கூடுதலாக அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்தி ருந்ததை ஏற்று கூடுதலாக 23 நெல் கொள்முதல் நிலைய திறக்க உள்ளதாக சம்பந்தப்பட்ட அதி காரிகள் தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் புயலுக்கு பின்னர் தற்போது நெல் அறுவடை பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை யடுத்து, கடந்த ஜனவரி 10ம் தேதி முதல், நேரடி நெல் கொள்முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை அதிகரித்து வருவதால், கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்குமாறு தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் மாவட்ட நிர்வாகம் மூலமாக கடந்த ஜனவரி 9 ந்தேதி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து, தீக்கதிர் நாளிதழிலும், கடந்த ஜனவரி 20-ந்தேதி செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. இதனையேற்று கூடுதலாக கொள்முதல் நிலையம் அமைக்கு மாறு, மாவட்ட ஆட்சியர் பழனி பரிந்துரைசெய்துள்ளார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு நுகர் பொருள்வாணிப கழகம் சார்பில் நேமூர், வி.மாத்தூர், எசாலம், வாக்கூர், மேட்டுவைலாமூர், எதப்பட்டு, ஓங்கூர், எலமங்கலம், சிறுவாடி, அரகண்டநல்லுார், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், அரும்பட்டு, மணக்குப்பம், புதுக்குப்பம், பெரும்பாக்கம், காணை ஆகிய 17 இடங்களிலும், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணைய நிறுவனம் சார்பில் இளங்காடு, கொரலுார், நீர்பெருந்தகரம், ஏதாநெமிலி, வட நெற்குணம், கொல்லுார் ஆகிய 6 இடங்களிலும், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வரும் 20-ந்தேதி முதல் செயல்படும் என சம்பந்தப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரி வித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலை யம் அமைக்க உடனடியாக பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்ட விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்டி.முருகன் கூறுகையில், கடந்தாண்டு மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வந்ததது. இந்நிலையில் இந்த ஆண்டு கூடுதல் நேரடி கொள்முதல் நிலை யத்துடன் சேர்த்து 53 நிலையங்கள் மட்டுமே உள்ளன. எனவே கடந்த ஆண்டை விட கூடுதலாக கொள்முதல் நிலையங்களை அமைக்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
புதிய மதுக்கடைகளுக்கு உரிமம் புதுச்சேரி பாஜக கூட்டணி அரசுக்கு சிபிஎம் கண்டனம்
புதுச்சேரி, ஜன.15- புதிய மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கும் புதுச்சேரி அமைச்சரவையின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சிபிஎம் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி கள் கூறியிருப்பதாவது:- அண்மையில் கூடிய புதுச்சேரி அமைச்சரவை சிலர் நீண்ட காலமாக அந்நிய மதுபானக் கடைகள் நடத்தி வரு கின்றனர். புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தி டும் நோக்கத்தில் புதிய உரிமைகள் வழங்க லாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர், ‘மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மதுக்கடை கள் திறக்கப்படுகின்றன” என்று கருத்து தெரிவித்திருந்தார். அதனுடைய தொடர் நடவடிக்கையாகத்தான் இம் முடிவு இருக்கிறது. இந்த முடிவு மாநிலத்தி னுடைய நலனுக்கு எதிரானது. ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வரும் தவறான மதுக் கொள்கையால் சாலை விபத்து களும், சமூக குற்றங்களும் அதிக எண்ணிக்கையில் பெருகி வருகின்றன. கணவனை இழந்த பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் மாநில அரசு, இந்தியா வில் கணவனை இழந்த பெண்கள் எண்ணிக்கையில் புதுச்சேரி மாநிலம் முத லிடத்தில் இருப்பதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் 2010ல் மாநில அரசு 90 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் முடிவை எதிர்த்து, சிபிஎம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கு விசாரணையில் மாநில அரசு தனிநபர்களுக்கு புதிய உரிமங்கள் வழங்க மாட்டோம் என்று உறுதி அளித்ததன் பெயரில் உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. ஆனால் தற்போது நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதியை தொடர்ச்சியாக மீறி மாநில நலனுக்கு எதிராக புதிய மது பானக் கடைகளுக்கு உரிமம் வழங்க முடி வெடுத்திருக்கிறது. இது ஏற்புடையது அல்ல என புதிய தனிநபர்களுக்கு வாய்ப்ப ளிக்க வேண்டும் என்று அரசு கருதி னால் தற்போது இயங்கும் கடைகளுக் கான உரிமங்களை குறித்த கால இடை வெளியில் சுழற்சி முறையில் வழங்கும் அணுகுமுறையை மேற்கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் இளையதலைமுறை நலனைக் கருதி புதுச்சேரியில் மதுக்கடை களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று சிபிஎம் வலி யுறுத்துகிறது. ஏற்கெனவே திறக்கப்பட்டிருக்கும் ரெஸ்ட்ரோபார்களால் புதுச்சேரி ‘மதுச்சேரி’யாக மாறி வருவதால் தற்போது புதிய நபர்களுக்கு மதுபானக் கடைகள் உரிமங்கள் வழங்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், புதுவை அரசின் இம்முடிவிற்கு சிபிஎம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.