districts

காலிப் பணியிடங்களை நிரப்புக: அங்கன்வாடி ஊழியர் மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 12- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அங் கன்வாடி ஊழியர் சங்கத்தின்  வடசென்னை மாவட்ட  மாநாடு வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 4ஆவது மாநாடு  ஓட்டேரியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.ருக் மணி தலைமை தாங்கினார். தேவி பிரசன்னா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சசிகலா வரவேற்றார். சிஐடியு வடசென்னை மாவட்ட துணைத் தலைவர்  ஆர்.ெஜயராமன் மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார். வி.ருக்மணி வேலை அறிக் கையையும், பொருளாளர் மணிமாலை வரவு-செலவு  அறிக்கையையும் சமர்ப் பித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் ரத்னா வாழ்த்திப் பேசினார். மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி மாநாட்டை நிறைவு  செய்து பேசினார்.
தீர்மானங்கள்
தரமான புதிய செல் போன் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். 3  வருடம் பணி முடித்த மினி  அங்கன்வாடி ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்க  வேண்டும், ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு பணிகொடையாக 10  லட்ச ரூபாயும், உதவியாளர் களுக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
10பேர் கொண்ட மாவட்டக்குழுவிற்கு தலை வராக தேவி பிரசன்னா, செயலாளராக சிரின், பொருளாளராக யுவராணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

;