districts

லாரி மோதி பெண் பொறியாளர் பலி

சென்னை,ஜூன் 16-

     கொளத்தூர் அக்பர் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் திவ்யா (வயது25). இவர் போரூரில் உள்ள  தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  வியாழனன்று இரவு 10 மணியளவில் மாதவரம் 100 அடி சாலை -வாட்டர் கேனல் சாலை சந்திப்பு அருகே சென்றபோது  பின்னால் வந்த தண்ணீர் லாரி இவரது மோட்டார் சைக்கிள்  மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய மகேஸ்வரியும், அவரது மகள் திவ்யாவும் கீழே விழுந்தனர். லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய திவ்யா சம்பவ இடத்திலேயே இறந்தார். தாய் மகேஸ்வரி சிறிது தூரம் தள்ளி விழுந்ததால்  லேசான காயத்துடன் உயிர்தப்பினார். தாய் கண் முன்னே மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.