districts

img

வங்கிகளில் தனிக் கழிவறை வேண்டும் பெண் ஊழியர்கள் மாநாடு கோரிக்கை

சென்னை, செப். 15 - வங்கி அலுவலகங்களில் தனிக் கழிவறை  அமைத்து தர வேண்டும் என்று பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியன் வங்கி ஊழியர் அசோசி யேஷனின் சென்னை மண்டல பெண் ஊழியர்  சிறப்பு மாநாடு சனிக்கிழமையன்று (செப்.14)  வடபழனியில் நடைபெற்றது. இந்தியன் வங்கியில் பணியாற்றும் 40  ஆயிரம் பேரில் 12ஆயிரம் பேர் (30 விழுக்காடு) பெண் ஊழியர்களாக உள்ள னர். பெரும்பாலான வங்கி அலுவலகங்களில்  ஆண் ஊழியர்கள் பயன்படுத்தும் கழி வறையையே பெண்களும் பயன்படுத்தும் சங்கடமான நிலை உள்ளது. இதனை மாற்றி அனைத்து அலுவலகங் களிலும் பெண் ஊழியர்களுக்கு தனி கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சங்கத்தின் செயலாளர் விஜயலட்சுமி கௌரிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை திரைக்கலைஞர் ரோகிணி தொடங்கி வைத்து உரையாற்றுகையில், “பணியிடத்தில் தவறு நிகழும்போது தைரியமாக கேள்வி எழுப்ப வேண்டும். அப்போதுதான் வேறு ஒரு பெண்ணுக்கு அது போன்ற துன்பம் நிகழாமல் பாதுகாக்க  முடியும்?” என்றார். சங்கத்தின் தலைவர் கே.கணேசன், பொதுச்செயலாளர் எஸ்.சுனில்குமார், பெண்கள் உபக்குழு அமைப்பாளர் கே.சிவ  சாரதா தேவி, முன்னாள் அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.