districts

img

சாதி வெறிக்கு ஆளான சக மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்

நெல்லை நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை மீது சாதி வெறிக்கு ஆளான சக மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து சனிக்கிழமையன்று (ஆக.13) புரசைவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின. மாதர் சங்கத்தின் எழும்பூர் பகுதிச் செயலாளர் நாகராணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் சித்தார்த்தன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் ஜெ.பார்த்திபன் உள்ளிட்டோர் பேசினர்.