districts

பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற மின்வாரியம் உத்தரவு

சென்னை, ஜூலை 18-

      மாநிலம் முழுவதும் பழுதடைந்த மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் மின் பொறி யாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

     தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீட்டில் மழை மற்றும் வேறு சில காரணங்களால் மின் மீட்டர்கள் பழுதடைந்து உள்ளதாகவும் இதனால் தங்களுக்கு அதிகளவில் மின்சார கட்டணம் காண் பிக்கப்படுவதாகவும் தொடர் புகார் தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து மின்சார வாரியம் சார்பில் மாநி லம் முழுவதும் ஆய்வு நடத்தினர். இதில், தமிழ கத்தின் பிரதான மாவட்டங் களாக கருதப்படும் சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்க ளில் 10,000க்கும் அதிகமான  மீட்டர்கள் பழுதாகியிருப் பது தெரியவந்தது. இதையடுத்து மின் வாரிய பொறியாளர் களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர்  அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில், நுகர்வோரின் வசதிக்காக வும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர் கள் உடனடியாக மாற்றப் பட வேண்டும். மாநிலம் முழு வதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.