districts

img

காலமானார்

கடலூர், பிப்.1- மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் டி.பழனிவேல் தந்தை சி.தேவராஜ் வெள்ளிக்கிழமை (ஜன.31) காலமானார். அவருக்கு வயது 82. இவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர், சிஐடியு கடலூர் மாவட்ட செயலாளர்  டி.பழனிவேல், மின் ஊழியர் மத்திய அமைப்பின் நெல்லிக்குப்பம் கோட்ட செயலாளர் டி.தனசேகர் ஆகியோரின் தந்தையாகும். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்பட்டாம் பாக்கம் அடுத்த கோழி பாக்கம் கிராமத்தில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், வி.உதயகுமார், வி.சுப்பராயன், எஸ்.திருஅரசு, பா.வாஞ்சிநாதன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.கருப்பையன், மூத்த தோழர் டி.ஆறுமுகம்,  நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் ஸ்டீபன் ராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன், மண்டலச் செயலாளர் கே. அம்பிகாபதி, மாவட்டச் செயலாளர் என்.தேசிங்கு, நிர்வாகிகள் எம்.கோவிந்தராசு, எஸ்.ரவிச்சந்திரன், எஸ்.பன்னீர்செல்வம், மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி சிஐடியு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். கே.பாலகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஞ்சலி தெரிவித்தார்.