districts

கொழுப்பு இல்லாத துருக்கி ஹேசல்நட் இந்தியாவில் அறிமுகம்

சென்னை,செப்.31- துருக்கிய ஹேசல்நட் ஏற்றுமதியாளர்கள் சங்கங்கள், நட்ஸ் மற்றும்  உலர் பழங்கள் கவுன்சில் ஆஃப் இந்தியா (என்டி எப்சிஐ) உடன் இணைந்து, துருக்கிய ஹேசல்நட்ஸை (கொட்டை) அதிகாரப் பூர்வமாக இந்தியாவில்  அறிமுகப்படுத்தியுள்ளன. துருக்கி தூதரகத்தில், துருக்கிய தூதுவர் ஃபிரத் சுனெல், கருங்கடல் நட்ஸ் மற்றும் ஹேசல்நட் பொருட் கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹசன் ஒஸ்மான் சபீர் மற்றும் இந்தியாவின் கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் கவுன்சில்  தலைவர் குஞ்சன் ஜெயின் ஆகியோர் முன்னி லையில், துருக்கிய தூத ரகத்தில் வெளியிடப்பட்டது.   இந்தியாவில் துருக்கிய  ஹேசல்நட் அறிமுகத்தின் போது, துருக்கிய தூதர்  ஃபிரத் சுனெல், “இந்த  முயற்சி இருதரப்பு உறவு களை வலுப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் உணவு மற்றும் சமையல் துறைகளில் மேலும் ஒத்து ழைப்பதற்கான அற்புதமான வாய்ப்புகளைத் திறக்கிறது”  என்றார்.  கொட்டைகளின் சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப் பைப் பாதுகாக்கும் பாரம் பரிய சாகுபடி முறைகள்  காரணமாக, துருக்கி உலகின் முன்னணி ஹேசல் நட் உற்பத்தியாளராக உள்ளது. துருக்கிய ஹேசல்நட்ஸ் அதன் இனிப்பு, கவர்ச்சியான சுவை மற்றும் தனித்துவமான அமைப்புக்கு பெயர் பெற்றது. அவை வைட்ட மின்கள், நார்ச்சத்து மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளிட்ட வலுவான ஊட்டச்சத்தை கொண்டுள்ளதாக துருக்கிய  தூதுவர் ஃபிரத் சுனெல் கூறினார்.