திருவள்ளூர், ஜுன் 14-
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து மனு அளிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கோவை விரைவு ரயில், பிருந்தா வன், கோவை இன்டர் சிட்டி உள்ளிட்ட 9 விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மார்ச் 11 அன்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதன் பிறகு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந் திரன், திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, நாடாளு மன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, முனைவர்.ஜெயகுமார், சு.வெங்கடே சன் ஆகியோருக்கு திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் கூட்டமைப் பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
சு.வெங்கடேசன்.எம்.பி
திருவள்ளூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மே மாதம் 24 ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார். அமைச் சரும் ஆய்வு செய்வதாக பதிலளித் துள்ளார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக் கைக்காக ஆலோசனை கூட்டம் ஞாயி றன்று (ஜுன் 11), திருவள்ளூரில் ரயில் பயணிகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணிகள் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ப.சுந்தர ராசன் தலைமை தாங்கினார்.இதில் ஜெயக்குமார்எம்பி, துரை.சந்திரசேகர் எம்எல்ஏ, நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பி னர் ஜெயக்குமார் பேசுகையில், ஜுலை 23 இறுதிக்குள் ரயில்வே அமைச்சரை சந்தித்து விரைவு ரயில்களை திருவ ள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். சாதகமான பதில் வராத பட்சத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வலுவான போராட்டம் மேற்கொள் ளப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் ரயில் பயணிகள் சங்கத்தின் நிர்வாகி கள் பாஸ்கரன், முபாரக், அசோக்குமார் ஜெயின், ரகுபதி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.